பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை நீடிப்பு

பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2020 ஆண்டு முதலாம் தர மாணவர்களுக்காக வழங்கப்பட்ட பாடசாலை சீருடை வவுசர்களின் கால எல்லை எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் திறக்கப்படாமை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை போன்ற காரணங்களை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.