சோதனைக்குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு இயற்கை ஆண் குழந்தை

சோதனைக்குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு இயற்கை ஆண் குழந்தை

இந்தியாவின் மும்பையில் சோதனைக் குழாய் மூலம் பிறந்த முதல் குழந்தையான ஹர்ஷா சவ்தாஷா தற்போது தனது 29வது வயதில் இயற்கையாகவே ஆண் குழந்தை ஒன்றை திங்களன்று பிரசவித்தார்.

ஹர்ஷா சவ்தாஷாவின் பெற்றோர்ருக்கு உதவிய அதே டாக்டர்கள் குழுவினர் தான் ஹர்ஷாவின் பிரசவத்தின் போதும் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர்.

1986-ல் செயற்கை கருத்தரித்தல் நுட்பங்களை பயன்படுத்தி பெற்றெடுத்த குழந்தை தான் ஹர்ஷா சவ்தாஷா.

தற்போது அவர் திருமணமாகி 29 வயது ஆகின்றது.

அவரது பெற்றோர்கள் போலல்லாமல், ஹர்ஷா மற்றும் திவ்யபால் ஷாவால் இயற்கையாகவே கருத்தரிக்க முடிந்தது.

இது குறித்து ஹர்ஷா மற்றும் அவரது கணவர் திவ்யபால் ஷா கூறுகையில், சிவராத்திரி நல்ல நாளில் குழந்தை பிறந்துள்ளது கடவுள் தந்த பரிசு என்று கூறினர்.