முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் திசாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு..

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் திசாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு..

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்கவை எதிர்வரும் ஆகஸ்ட் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி. திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.

கடந்த 2007 ம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)