சகல பல்கலைக்கழகங்களினதும் மருத்துவபீட மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்..

சகல பல்கலைக்கழகங்களினதும் மருத்துவபீட மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்..

மருத்து பீட மாணவ அமைப்பின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை கடத்த முயன்றமை மற்றும் கெக்கிராவையில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணையகத்திடம் முறைப்பாடு செய்ய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

மேலும், எதிர்வரும் திங்கள் தொடக்கம் சகல பல்கலைக்கழகங்களினதும் மருத்துவபீட மாணவர்கள் எதிர்ப்பை வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  பல்கலைக்கழக மாணவ அமைப்பின் பதில் இணைப்பாளர் சனத் பண்டார தெரிவித்தார்.

இதனிடையே, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக அரசு ஒடுக்கு முறையை கையாளுவதாக தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்திடம் மனு ஒன்றை கையளிக்க தீர்மானித்துள்ளதாகவும் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே கூறினார்.

 

 

(rizmira)