பந்துல குணவர்தன’விடம்  கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு விசாரணை…

பந்துல குணவர்தன’விடம் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு விசாரணை…

வெற்றி இலக்கம் அற்ற, சீட்டிழுப்பு தினம் ஒன்று இல்லாத கொவிசெத லொத்தர் சீட்டு சந்தையில் உள்ளதாக குற்றம் சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்து தொடர்பில் நேற்று(12) கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு விசேட விசாரணை ஒன்றினை நடத்தியுள்ளது.

நேற்று(12) பிற்பகல் மூன்று மணி முதல் ஐந்து மணி வரை கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இரு மணி நேரம் விசாரணை செய்து வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்து கொண்டது.

லொத்தர் சபை கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.

 

(rizmira)