கோலாலம்பூர் மத பள்ளி தீ விபத்தில்  25 பேர் பலி…

கோலாலம்பூர் மத பள்ளி தீ விபத்தில் 25 பேர் பலி…

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மத பள்ளிக்கூடம் ஒன்றில் இன்று(14) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ் விபத்தில் சிக்கி பள்ளி விடுதியில் இருந்த 23 மாணவர்கள் மற்றும் 2 விடுதி காப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.