பணிப்புறக்கணிப்பு  காரணமாக மின் விநியோகம் தடை..

பணிப்புறக்கணிப்பு காரணமாக மின் விநியோகம் தடை..

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக தற்போது சில பகுதிகளில் மின்சார விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(13) முதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்துடன் நாளை(14) நண்பகலுக்கு முன்னர் குறித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால்  காலவரையறையின்றி பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை தொடர்ந்தும் மேற்கொள்ள தீர்மானித்ததாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.