05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..

05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..

நாட்டில் நிலவுகின்ற மழையுடன் கூடியஅசாதாரண காலநிலை காரணமாக 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை அகிய மாவட்டங்களுக்கு குறித்த இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிலையம் இன்று(14) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றும்(14) நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

 

(rizmira)