ப்ரமோதய விக்கிரமசிங்கவுக்கு எதிராக 40 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முறைப்பாடு..

ப்ரமோதய விக்கிரமசிங்கவுக்கு எதிராக 40 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முறைப்பாடு..

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் தெரிவுக்குழு உறுப்பினருமான ப்ரமோதய விக்கிரமசிங்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிய கடிதம் ஒன்று கிரிக்கெட் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் 40 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் தினேஷ் சந்திமால் மற்றும் ஒரு நாள் அணித்தலைவர் உபுல் தரங்க ஆகியோர் மூலம் குறித்த கடிதம் கிரிக்கெட் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த இந்திய தொடர் தொடரில் ப்ரமோதய வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொடரின் போட்டிகளின் போது தேவையற்ற விதத்தில் தோல்விகளை சந்தித்ததாகவும் போட்டியின் போது எடுக்கப்படும் தீர்மானங்களில் வெளியிலுள்ள நபரொருவரின் செயற்பாடு இருந்ததாகவும் ப்ரமோதய விசக்ரமசிங்க தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் குற்றம் சாட்டியிருந்தார்.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டினை நிராகரிப்பதாகவும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் காரணமாக வீரர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாகவும் இது தொடர்பில் சரியான விசாரணை மேற்கொள்ளுமாறும் அதற்கான பூரண ஒத்துழைப்பை அணியிலுள்ள அனைத்து வீரர்களும் வழங்குவதாகவும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் வழங்கியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)