இலங்கை வந்தடைந்தார் ஜனாதிபதி…

இலங்கை வந்தடைந்தார் ஜனாதிபதி…

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(25) காலை இலங்கை வந்தடைந்தார்.

இவ் விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 72 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றியதுடன் பல அரச தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனையும் இவ் விஜயத்தின் போது ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.