தேசிய அரசினை தொடர ஐ.ம.சு.முன்னணி இணக்கம்…

தேசிய அரசினை தொடர ஐ.ம.சு.முன்னணி இணக்கம்…

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் இந்த கூற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் –

“அரசியலமைப்பின் கீழ், குறித்த யோசனை இன்னும் நிலுவையில் உள்ளது, சூழ்நிலைக்கு அமைய தேசிய அரசாங்கம் இவ்வாறே முன்னெடுக்கப்படும், கருத்துக்களில் மாற்றம் இல்லை”

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர –

“ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐ.ம.சு.முன்னணி உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது, தொடர்ந்தும் உடன்படிக்கையின் பிரகாரம் தேசிய அரசு முன்னெடுக்கப்படும்”

 

#rishma