லங்கன் பிரீமியர் லீக் – ஆகஸ்ட் 18 முதல் செப்டெம்பர் 15 வரை..!!!
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள ‘லங்கன் பிரீமியர் லீக்’ இருபதுக்கு 20 கிரிக்கெட் தெராடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் நடைபெற்றுவரும் ஏனைய பிரீமியர் லீக் தொடர்களைப் போலவே இத்தொடரிலும் இலங்கை மற்றும்ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரபல்யமிக்க வீரர்களை இணைத்துக்கொள்ளவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.
6 அணிகள் பங்குகொள்ளும் இப்போட்டித் தொடரின் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளை தலா இரு முறை எதிர்த்து விளையாடுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது..
$Rishma