இருபதுக்கு – 20 முக்கோணத் தொடரின் தலைமை மஹேலவுக்கு…
இருபதுக்கு – 20 முக்கோணத் தொடருக்காக இங்கிலாந்து மர்லிபோர்ன் விளையாட்டு கழக அணியின் தலைமைப் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தனவினை நியமித்துள்ளனர்.
2015ம் ஆண்டு இங்கிலாந்தில் மர்லிபோர்ன் விளையாட்டு கழகத்தில் மஹேல ஜெயவர்தன வாழ்நாள் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு இவ்வாறு தலைமைப் பதவி மஹேலவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேபால், நெதர்லாந்து மற்றும் மர்லிபோர்ன் ஆகியவற்றுக்கு இடையே இடம்பெறும் குறித்த போட்டியானது 03 போட்டிகளாக நடாத்தப்படவுள்ளது.
அதன்படி, குறித்த போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 29ம் திகதி இங்கிலாந்தில், லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டி அட்டவணை;