பாராளுமன்ற மோதல் குறித்து 02 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு…

பாராளுமன்ற மோதல் குறித்து 02 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு…

அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

குறித்த குழு இன்று(12) பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூடியது.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, மோதல் பதிவாகியுள்ள காணொளி பதிவு, பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களுடன், வெளிநபர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள கூட்டத்தில் தீர்மானிக்ப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.