பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழப்பு…

பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழப்பு…

கிழக்கு பிரான்ஸின் ஸ்ட்ராபோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை நடத்தியவர் பாதுகாப்பு தரப்பினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரை தேடும் பணிகளை பொலிசார் மேற்கொள்வதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் தொடர்பில் பிரான்ஸ் தீவிரவாத முறியடிப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர் ஏற்கனவே தீவிரவாத அச்சுறுத்தல் சந்தேகத்தின் பேரில் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டவர் என்றும் கூறப்புடுகிறது.