அதிவேக வீதி ஊடாக 30 மில்லியனுக்கும் அதிகமான தொகை வருமானம்…

அதிவேக வீதி ஊடாக 30 மில்லியனுக்கும் அதிகமான தொகை வருமானம்…

(FASTNEWS|COLOMBO) புத்தாண்டு காலத்தில் அதிவேக வீதி ஊடாக 320 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் 12 இலட்சம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதனால் 30 மில்லியனுக்கும் அதிகமான தொகை வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.