தொடர் குண்டுத் தாக்குதல்கள் – எந்த ஒரு சமுதாயத்தையும் குற்றம் சாட்ட வேண்டாம் -TNA

தொடர் குண்டுத் தாக்குதல்கள் – எந்த ஒரு சமுதாயத்தையும் குற்றம் சாட்ட வேண்டாம் -TNA

(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவிய தொடர் குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களை பிழையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கையில்;

“அனைவருக்கும் வேண்டுகோள் விடுகிறேன்-குறிப்பாக அரசியல்வாதிகள் – இத் துயருக்காக எந்த ஒரு சமுதாயத்தையும் குற்றம்சாட்ட வேண்டாம். இந்த நாட்டிலுள்ள முஸ்லீம்கள் வன்முறைகளால் திணிக்கப்பட்ட போதிலும் வன்முறையில் ஈடுபடவில்லை. அதை மிகவும் மதிக்கிறோம்..” என தெரிவித்துள்ளது.