அமைச்சர் ஃபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.
நாளை மறுதினம் இதற்கான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
ஜனநாயக கட்சியின் தலைவரான அவர், எதிர்வரும் வியாழக்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.