அகலவத்தை பிரதேச மக்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை…

நிலவும் சீரற்ற காலநிலையுடன் அகலவத்தை பிரதேசத்தில் மலைப் பகுதிகளில் இருப்பவர்கள் தொடர்ந்தும் மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

நேற்று(09) அகலவத்தை பிரதேசத்தில் 100mm வரை கடும் மழை பெய்துள்ளதாக அந்த நிலையத்தின் உதவி இயக்குனர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த நிலைமையுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் அந்த பிரதேசத்திற்கு மண் சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனுடன் குக்குலே கங்கையின் வான் கதவுகள் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

(rizmira)