அங்குலான மற்றும் லுனாவ ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலுடன் பாரவூர்தி மோதியதில் ரயில் மிதிப் பலகையில் பயணித்த 4 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த 9 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மருதானையில் இருந்து தெற்கு களுத்துறை நோக்கி நேற்று(05) பிற்பகல் 4.10 க்கு புறப்பட்டுச் சென்ற கடுகதி ரயிலில் பயணித்த சிலரே இவ்வாறு விபத்துக்குள்ளாகினர்.