அங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 33 வயதுடைய ராஜகிரிய, கலபழுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த தாரக இரோசன முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவிஸ்ஸாவளை வீதியில் இன்று(05) மாலை மூன்று மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.