அசோக ரண்வல பிணையில் செல்ல அனுமதி..

மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக ரண்வல பிணையில் செல்ல நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(12) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சப்புகஸ்கந்த பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியை அச்சுறுத்திய காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#resham