(FASTNEWS|COLOMBO) பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் நாளை(21) முதல் அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை 21ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று அன்றாட செயற்பாடுகளை வழமையான முறையில் முன்னெடுக்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்திருக்கின்றார்.