அடம் பிடிக்கும் தோனி!

தோனியின் சுயசரிதை பற்றிய திரைப்படமான ‘அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற திரைப்படத்துக்கு அவர் ரூ.80 கோடி ரயால்டியாக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் சுஷாந்த்சிங் ராஜ்புத் நடிக்கும் ‘அன்டோல்ட் ஸ்டோரி’ என்ற திரைப்படம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ள தோனியின் வாழ்க்கையில் நடந்த சுவாரஷ்யமான விஷயங்களை சுவைபட இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்த படத்தை வெளியிட தோனி தனக்கு ராயல்டியாக 80 கோடி ரூபாய் கேட்பதாக செய்திகள் வெளி வந்துள்ளது.