(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அடுத்த வாரமளவில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன இன்று முறைப்பாடு செய்திருந்தார்.குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்றை தேர்தல் நலனுக்காக மேற்கொள்ள சதி செய்து வருவதாக முறைப்பாட்டில் கூறப்படுகிறது.
