(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019ம் ஆண்டு கல்வியாண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விசேட சேவை ஒன்று இன்று(26) மதியம்12 மணிவரை இடம்பெறும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரவித்துள்ளது.
பத்தரமுல்லை பிரதான அலுவலகம் உள்ளிட்ட பிரதேச அலுவலகங்கள் சிலவற்றில் இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரவித்துள்ளது,
இதன்படி, காலி, குருநாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேச அலுவலகங்கள் இன்று இவ்வாறு திறக்கப்படவுள்ளதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.