அட்டையாக இருப்பதை விட பட்டாம் பூச்சியாக இருப்பது மிகவும் கௌரவமானது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(05) ´மக்கள் மகிமை´பேரணியில் ஆற்றியிருந்த உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே குறித்த பதிவினை மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“கடந்த அரசாங்கத்தில் அனைத்து தீர்மானங்களும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பட்டாம் பூச்சி குழுவினாலேயே எடுக்கப்பட்டது” என நேற்று(05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
