அட்மிரல் ரவீந்திர இன்று(27) சி.ஐ.டி யில் முன்னிலை…

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு சபையின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று(27) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

11 மாணவர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம் வழங்கிய சம்பவம் தொடர்பாக வாக்குமூலமளிப்பதற்காகவே இவர் இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.