அதி­பரும் பௌத்த தேரர் ஒரு­வரும் கைது

கேகாலை, ரங்­வல மஹா­நாக மஹா வித்­தி­யா­ல­யத்தின் அதி­பரும் பாட­சா­லையில் எழு­து­வி­ளைஞர் பத­வியில் இருக்கும் பௌத்த தேரர் ஒரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்­றச்­சாட்டு விசா­ரணை ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.
தரம்–6 இற்கு மாணவர் ஒரு­வரை இணைத்துக் கொள்­வ­தற்­காக 60,000 ரூபா இலஞ்­ச­மாக பெற்றுக் கொள்ளும் போது இவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
கிடைக்கப் பெற்ற தக­வலின் படி இவர்கள் பாட­சாலை வளா­கத்தில் வைத்து நேற்றுக் காலை கைது செய்­யப்­பட்­ட­தாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்­றச்­சாட்டு விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் விசா­ரணைப் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதி­காரி பிரி­யந்த சந்­தி­ர­சிறி தெரி­வித்தார்.
சந்­தேகநபர்கள் கேகாலை நீதி வான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத் ­தப்­ப­ட­வுள்­ள­துடன், சம்­பவம் தொடர் பான மேலதிக விசாரணைகள் முன் னெடுக்கப்படுவதாக அவர் கூறி னார்