நேற்று(10) நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து முச்சக்கரவண்டி பயண கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முதல் கிலோமீற்றருக்கு 10 ரூபாவால் விலையை அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
முதல் கிலோமீற்றருக்கு 50 ரூபாவாக குறைந்த பட்சவிலை கட்டணம் 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.