வட மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பிரியதர்ஷன இலங்கசிங்ஹ என்பவரை, குறித்த பதவியிலிருந்து உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
அப்பதவிக்கு தகுதியான ஒருவரை நியமிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ திசாநாயக்கவிடம் எழுத்து மூலமாக கோரியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
(rizmira)