அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெறும் விபத்துக்களைக் குறைப்பதற்கு எதிர்வரும் மாதங்களில், விசேட வேகக் கட்டுப்பாடு நிலையங்கள் ஸ்தாபிக்கவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்துச் செயற்பாடுகள் குறித்தான நிறுவனத்தின் இயக்குநர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், வேகக்கட்டுப்பாட்டினை மீறும் வகையில் செயற்படும் ஓட்டுநர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது நடைமுறையிலுள்ள பாதுகாப்புத் திட்டங்களை மேம்மைப்படுத்தியே, இந்தப் பாதுகாப்புச் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.