அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து – 05 பேர் காயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் பத்தேகமவிற்கும் இடையில் கார் ஒன்று விபத்திற்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் ஒன்று அதிவேகமாக பயணித்துள்ள நிலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவத்தில் காயமடைந்தவா்களில் இரண்டு ஆண்களும் மற்றும் மூன்று பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.