அதிவேக வீதிகள் நாளை முதல் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக வீதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நாளைய தினம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.