சீரற்ற காலநிலை காரணமாக வெள்ள அனர்த்தம் அபாயம் நிலவிய களனி, களு, கிங், நில்வளா கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓய, மகா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் மாலா அலவத்துகொட இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த 9 மணித்தியாலங்களில் நீரேந்தும் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை அத்தனகலு ஓயவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமை காரணமாக நீர்கொழும்பு, கட்டான, ஜாஎல மற்றும் கம்பஹா முதலான பகுதிகளில் தாழ்நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயல்படவேண்டும் என்றும் நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.