எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச மட்ட வியாபாரிகளுக்கு நேர காலத்துடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனெவிரட்ன தெரிவித்துள்ளார்.
சதொச கூட்டுறவு விற்பனை நிலையம் என்பனவற்றிலும் தேவையான பொருட்களை களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.