அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரத்திற்குள் வௌியிடப்படும் என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, தேங்காய் ஒன்றிற்கான சில்லரை விலை 75 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோகிராம் அதிகபட்சம் 130 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 76 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.