அத்துருகிரிய, ஜோதிபால மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று(26) அதிகாலை 03.00 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் எவ்வித உயிராபத்துக்களும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் தனிப்பட்ட செயலாளரின் வீட்டில் என தகவல்கள் மேலும் தெரிவிக்கினறன.
-rish