அநுராதபுரதம் ஆடைத்தொழிற்சாலையில் 13 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடைகள் கொள்ளை; பெண் உட்பட மூவர் கைது!

அநு­ரா­த­புரம், நெலு­பாவ ஆடை தொழிற்­சா­லையில் 13 கோடியே 75 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஆடைகள் கொள்­ளை­யி­டப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய ஒரு பெண் உட்­பட மூன்று சந்­தேக நபர் கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் மேலும் ஒருவர் பொலி­ஸா­ரினால் தேடப்­பட்டு வரு­கிறார்.

அநு­ரா­த­புர நீதிவான் நீதி­மன்ற பதில் நீதவான் நிர்­மலி பிரி­ய­தர்­சனி காரி­ய­வசம் முன்­னி­லையில் சந்­தேக நபர்கள் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது அவர்­களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார்.

இச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய மேலும் ஒரு சந்­தேக நப­ரையும் உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு நீதிவான், ஹிதோ­கம பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி கஸ்­தூ­ரி­யா­ராச்­சிக்கு உத்­த­ர­விட்டார்.

புது வருட விடு­மு­றைக்­காக மூடப்­பட்­டி­ருந்த ஆடை தொழிற்­சா­லை­யி­லி­ருந்து இந்த பாரிய அள­வி­லான கொள்ளை சம்­பவம் நடை பெற்­ற­தா­கவும் சந்­தேக நபர்கள் கட்­டு­நா­யக்கா மற்றும் கொச்­சிக்­கடை பகு­தியை சேர்ந்­த­வர்கள் எனவும் ஹிதோ­கம பொலிஸார் தெரி­வித்­தனர்.

அநு­ரா­த­புரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதுல வீரசிங்க பணிப்பின் கீழ் சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.