அநுராதபுர வாவிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டமானது இன்று(21) ஜனாதிபதி தலைமையில்…

அநுராதபுர மாவட்டத்தின் வாவிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டமானது இன்று(21) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

மஹவிலச்சிய, நபடகஸ்திகிலிய வாவி ஊடாக அநுராதபுர மாவட்டத்தின் குறித்த வாவிகளது புனரமைப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

மஹவிலச்சிய மற்றும் நொச்சியாகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 17 வாவிகள் புனரமைப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த திட்டத்தின் கீழ், 2400 வாவிகள் மறுசீரமைக்கப்படவுள்ளது.