அநுருத்த பொல்கம்பொல அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமனம்..

அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலஞ்சக் குற்றச்சாட்டில், 2 கோடி ரூபா பணத்தை முற்பணமாக பெறும் போது கைது செய்யப்பட்ட அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி. திசாநாயக்க குறித்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அநுருத்த பொல்கம்பொல நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.