அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணியளவில் குறித்த இந்த மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் தீவுப் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து 199 கிலோ மீட்டரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இலேசாக நடுங்கியுள்ளன.
இந்த நிலையில் கடல் சற்று சீற்றமாக காணப்பட்டதோடு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.