அனர்த்தங்கள் குறித்து அரசு ஆயத்தமாக இருக்கவில்லை – கபே அமைப்பு குற்றச்சாட்டு..

அனர்த்தங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆயத்தமாக இருக்கவில்லை என கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அரசுக்கு குற்றம் சுமத்தியுள்ளது.

அவசர அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள அரசாங்கம் உரிய முன் ஆயத்தங்களுடன் இருக்கவில்லை எனவும் அதனால் பாரியளவில் உயிர், உடமைச் சேதங்கள் ஏற்பட்டதாகவும் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“..சில ஆண்டுகளாகவே இலங்கையில் அடிக்கடி இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தற்போது அது வருடாந்த நிகழ்வாக மாற்றமடைந்துள்ளது. அனர்த்தம் ஏற்படும் போது அதற்கு உதவிகளையும் ஆவணங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டினை போலவே இந்த ஆண்டிலும் அனர்த்த நிலைமையை காண முடிந்தது.

அனர்த்த முகாமைத்துவம் உரிய முறையில் திட்டமிடப்படாமை ஓர் துரதிஷ்டவசமான சம்பவமாகும்.. பாரிய அனர்த்தங்களின் போது தேயிலை, சீனி மற்றும் அரிசியை சேகரிப்பதில் பயனில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போதைய நிலைமைக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்..” எனவும் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

(rizmira)