இலங்கையின் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இழக்கப்பட்ட உயிர்கள் உடமைகளுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது அனுதாபத்தினை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசர உதவிகளை இலங்கைக்குஅனுப்பி வைக்கவும்; அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும் மோடி தனது இரங்கல் செய்தியில் அறிவித்துள்ளார்.