அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் மின்சார சபையின் பொறியியலாளர்களது சட்டப்படி வேலை கைவிடப்பட்டது…

காலநிலையினால் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில், மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக, அந்த பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

20 ஆண்டு குறைந்த செலவுத்திட்டத்தை செயற்படுத்துமாறு கோரி, கடந்த 08 ஆம் திகதி முதல், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.