நாட்டில் ஏற்பட்டுள்ள அனரத்த நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றம் இன்றையதினம்(25) கூடவுள்ளது.
சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பிற்பகல் 1மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனர்த்த நிலைமைகள்தொடர்பில் பேச்சுவார்ததை ஒன்று அவசியம் என்பதை கட்சி தலைவர்களின் கூட்டத்தில்பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தௌிவுப்படுத்தியிருந்தார்.
மேலும் பல கட்சிதலைவர்களின் ஆலோசனைக்கமைய பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலும் கடந்த சிலதினங்களுக்கு முன்னர் வௌியானமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.