திருகோணமலை மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் இரண்டு அனல் மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்படடிருந்தது
600 மெகா வோட் திறனுடைய இரண்டு அனல் மின் நிலையங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட மின்சார உற்பத்தி கொள்கைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கலாநிதி சரத் அமுனுகம மற்றும் அமைச்சர் ரன்ஜித் சியாம்பலாப்பிட்டிய ஆகியோரால் கையொப்பம் இடப்பட்ட இணைந்த அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.