அனுமதியற்ற விற்பனை நிலையங்களை அகற்ற நடவடிக்கை…

(FASTNEWS|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமையை கருத்திற் கொண்டு புறக்கோட்டை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து தரிப்பிடத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனுமதியற்ற விற்பனை நிலையங்களை அகற்ற பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று(30) இரவிலிருந்து இவ்வாறு வர்த்தக நிலையங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது , குறித்த பகுதியிலிருந்து அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டிருந்த சுமார் நூற்றுக்கும் அதிகமான விற்பனை நிலையங்கள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.