அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இம்மாதத்துக்குள் அகற்ற நடவடிக்கைகள்…

வெலிகம –மிரிஸ்ஸ, தெஹிவளை – கல்கிசை மற்றும் நீர்கொழும்பு ஆகிய கடற்கரை பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இம்மாதத்துக்குள் அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மற்றும் ​ஏனைய அரச நிறுவனங்களுடன் இணைந்து இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக, அதன் பணிப்பாளர் பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் சுற்றுலாத் துறையினர் அதிகளவில் வருகை தருகின்றமை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்கரை பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.