அனைத்துத் தேசிய பூங்காக்களிலும் வழமைப்போல் பார்வையிட அனுமதி…

(FASTNEWS|COLOMBO) அனைத்துத் தேசிய பூங்காங்களைபார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவற்றிலுள்ள சுற்றுலா விடுதிகளை வழமை போன்று ஒதுக்கீடு செய்ய முடியும் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.பி.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

தேவையான ஒத்துழைப்பும், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருவதுடன், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வழமை போன்று பூங்காங்களை பார்வையிட வருகை தர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.